search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water level rise in"

    • ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை
    • இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பவா னிசாகர் அணையின் நீர்ம ட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது. இன்று மதிய த்திற்குள் 81 அடியை எட்டி விடும். அணைக்கு வினாடி க்கு 3 ஆயிரத்து 56 கன அடி யாக நீர் வந்து கொண்டி ருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து பாசன த்திற்கு தண்ணீர் மீண்டும் நிறுத்த ப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வருவ தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகி றது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 4.72 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.86 அடியாகவும் உள்ளது.

    ×