search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water entered the"

    • மாவட்டத்தில் ஈரோடு நகரிலும், பவானியிலும் கனமழை பெய்தது.
    • ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் மழை நீர் குளம்போல தேங்கியது.

    ஈரோடு:

    கோடைக்காலம் முடி வடைந்து தென்மேற்குப் பரு வமழைக்காலம் தொடங்கிய பின்னரும், போதிய மழை யின்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால் கோ டைக்காலத்தை போலவே 100 டிகிரிக்கு மேலாகவே வெயில் வாட்டி வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவ ட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீ ரென வானம் இருண்டு, கரு மேகங்கள் சூழ்ந்தது. சில நிமி டங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த இந்த கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நீடித்து வ ந்த வெப்பம் குறைந்து குளி ர்ச்சியான கால நிலை ஏற்ப ட்டது. மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலு ம் தண்ணீர் தேங்கி நின்றது.

    ஈரோடு நேதாஜி மார்கெட், ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் ஆகிய இடங்களில் தண்ணீர் புகுந்து குளம்போல தேங்கி நின்றது.

    மார்கெட்டில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி ஊ ழியர்கள் கழிவு நீர் அகற்றும் வாகனங்களின் உதவியுடன் இன்று காலை யில் அகற்றும் பணியி ல் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் மழை நீர் குளம்போல தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிக்கு ள்ளாகினர்.

    நேற்று மாவட்டத்தில் ஈரோடு நகரிலும், பவானியிலும் கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஈரோ டு நகரில் 35 மி.மீ. மழை பதிவாகியது. பவானியில் 1.80 மி.மீ. பதிவாகி இருந்தது.

    இதேபோல் மொடக்கு றிச்சி சுற்று வட்டார பகுதிக ளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    ×