என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was temporarily shut down for"

    • எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது.
    • தொழிற்சாலையை மூட க்கோரி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே தொப்ப ம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வனப்பகு தியை ெயாட்டி விவசாய விளை நிலங்களுக்கு இடையே எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது.

    இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தி ருந்தனர்.

    அனுமதியின்றி செயல்ப டும் இந்த ரப்பர் ஆலையால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் கெட்டு விவசாயம் பாதிக்கப்படுவ தாக குற்றம் சாட்டிய விவசாயிகள் மற்றும் விண்ண ப்பள்ளி, விளாமுண்டி விவசாயிகள் நல சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவத்தன்று தொழிற்சாலையை மூட க்கோரி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரப்பர் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும் இது சம்பந்தமாக அரசுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி அமைக்கப்பட்ட தொழிற்சாலையை நிரந்த ரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×