search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was levied for"

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ×