search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walking woman"

    • தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
    • செயின் பறிப்பு தொடர்பாக பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது52).

    இவர் நேற்று தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் சொக்கலிங்கபுரம் கல்லடி தெருவில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் செயினை இறுக்கமாக பிடித்தவாறு கத்தி கூச்சலிட்டார்.

    இதில் செயின் இரண்டாக துண்டானது. இதில் 6 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். 2½ பவுன் செயின் வள்ளியம்மாளிடம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக அவர் பணகுடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ×