search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walk over bridge"

    • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
    • விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரப் பகுதியில் முக்கிய ரோடுகளாக உள்ள அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு ஆகிய ரோடுகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

    பெரும்பாலான ரோடுகளில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் ஆகிய வசதியில்லாத நிலை இருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, பார்க் ரோடு, ெரயில் நிலையம் ,காங்கேயம் ரோடு ஆகிய பகுதிகளில் உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.அதேபோல் அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாதக்கணக்கில் மேற்கொண்ட பாலம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் மீது வர்ணம் பூசும் பணி தற்போது நடக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது

     உடுமலை:

    தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே பொள்ளாச்சி ரோட்டில் ரோட்டை கடக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் கடைவீதிகளுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×