உடுமலையில் கட்டப்பட்ட நடை மேம்பாலம் திறக்கப்படுமா?

பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது
உடுமலையில்  கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம்.
உடுமலையில்  கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம்.
Published on

 உடுமலை:

தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே பொள்ளாச்சி ரோட்டில் ரோட்டை கடக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் கடைவீதிகளுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com