என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "W20 Summit"
- மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது.
- வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி பார்த்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி நாள் மாநாடு என்பதால் வெளிநாட்டு விருந்தினர்களை தமிழ் கலாசாரப்படி திருமண விருந்தில் பந்தி பரிமாறுவது போல, வடை, பாயசத்துடன் வாழை இலை விருந்து வைக்க மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சகம் முடிவு செய்தது.
அதன்படி மகளிர் ஜி 20 மாநாடு முடிந்தவுடன் வெளிநாட்டு பெண் பரதிநிதிகள் விருந்தில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிட்டனர். நட்சத்திர ஓட்டலின் உணவு கூட ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து விருந்து பரிமாறினர்.
வாழை இலையில் கூட்டு, சம்பார், பொரியல், பாயாசம் வழங்கி விருந்து பறிமாறப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் போன்றவற்றை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர்.
வேட்டி, சட்டையில் மாறியிருந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் அருகிலேயே நின்று கொண்டு திருமண விருந்துக்கு வரும் உற்றார், உறவினர்களை உபசரிப்பது போல சம்பார் வேண்டுமா? கூட்டு பொரியல் வேண்டுமா? என ஆங்கிலத்தில் கேட்டு பரிமாறினார்.
இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களை தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றதை காண முடிந்தது.
- மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு இன்று தொடங்கியது.
- இந்த மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் புளூபே ரிசார்ட்டில் ஜி 20 உச்சி மாநாட்டின் ஓர் அங்கமான, டபிள்யூ-20 மாநாட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பெண்களின் நலன், பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பெண்கள் நலன் குறித்து பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் நடந்தது.
நாளையும் இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் நட்சத்திர ஹோட்டல் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்