search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்பு
    X

    மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்பு

    • மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு இன்று தொடங்கியது.
    • இந்த மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் புளூபே ரிசார்ட்டில் ஜி 20 உச்சி மாநாட்டின் ஓர் அங்கமான, டபிள்யூ-20 மாநாட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டில் பெண்களின் நலன், பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பெண்கள் நலன் குறித்து பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் நடந்தது.

    நாளையும் இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் நட்சத்திர ஹோட்டல் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    Next Story
    ×