search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vomiting fainting"

    • கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.
    • ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார்.

    புதுச்சேரி :

    காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர்கள் ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதிகள். ஸ்டெல்லா மேரி வரிச்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது 14) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி சலேத் நிதிக்சனா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஏன் வாந்தி எடுத்தாய் என, சிறுமியிடம் தாய் கேட்டபோது, ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனே தாய் ஸ்டெல்லா மேரி சிறுமி சலேத் நிதிக்சனாவை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுமி சலேத் நிதிக்சனா சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இது குறித்து, கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தண்டராம்பட்டு அருகே ஒரே கிராமத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு வாந்தி- மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவக்குழுவினர் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள கொழுந்தம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் 5 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

    பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில் கங்கா (வயது 5), காவியா (7), மோகன் (7), ஜனனி (5), வெங்கடேசன் (5) ஆகிய 5 குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் தெரிய வந்தது. இந்த 10 பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொழுந்தம்பட்டு கிராமத்துக்கு, சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் பாசி படிந்தும், மண் கலந்தும் வருவதாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, பாதுகாப்பற்ற தண்ணீரால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    ஒரே நேரத்தில் 10 பேர் மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மேற்பார்வையில் நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×