என் மலர்
நீங்கள் தேடியது "Visit of Chief Minister M. K. Stalin to Vellore"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
- 4-ந் தேதி முதல் மீண்டும் மாடு விடும் விழா நடக்கும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டி கையொட்டி மாடு விடும் திருவிழா கடந்த 16-ந் தேதி முதல் பல்வேறு ஊர்க ளில் நடந்து வருகிறது.
இந்த திருவிழாக்களில் 100-க்கும் மேற்பட்ட மாடு களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
வரும் மார்ச் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக ஒவ் வொரு ஊருக்கும் விழா நடத்த ஒரு தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் வருகிற 1-ந்் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். வி.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச் சியில் 1-ந் தேதி கலந்து கொள்ள உள்ளார்.
2-ந் தேதி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்தும் கலெக் டர்கள் எஸ்பிக்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துக்கிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். இதற்கான ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரை மாடு விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து வரு வாய்த்துறை அதிகா ரிகள் கூறுகையில், 'வேலூர் மாவட் டத்திற்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி வர உள்ளார்.
2 நாட்கள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளில் அனைத்துதுறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாடு விடும் விழா நிகழ்ச்சிக்கு அதிகாரி கள் குழுவினர் மற்றும் போலீசாரும் செல்ல முடி யாத சூழ்நிலை உள்ளது.
இதனால் வருகிற 31-ந் தேதி முதல் வரும் 3-ந் தேதி வரை மாடு விடும் விழாவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ஊர் களுக்கு வேறு ஒரு நாளில் மாடு விடும் விழா நடத்த தேதி ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். 4-ந்் தேதி முதல் மீண்டும் மாடு விடும் விழா நடக்கும்' என்றனர்.






