search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virus disease"

    • தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.
    • ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு உள்ள தக்காளி மார்க்கெட்டிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை , மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது பல தனியார் நிறுவனங்கள் தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்ததால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.

    இந்த நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, கரகூர், சோமன அள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக்கும் நிலையில் கிலோ தக்காளி ரூ.10 வரை மட்டுமே தற்போது விற்பனை ஆகிவருகிறது.

    இதனால் விரக்தி அடைந்த பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×