search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers Suffering"

    தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் குண்டியாநத்தம், ஊராட்சிக்கு உட்பட்டது கருவேலம்பாடி, சின்ன கருவேலம்பாடி, மேட்டுவளவு கிராமங்கள். இந்த 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நொச்சிமேடு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும் இந்தபகுதி மக்கள் அவசரத்துக்கு கூட மருத்துவத்திற்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகள் அமைத்து அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் சாலை வசதி வேண்டுமென்று பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொச்சி மேடு முதல் கருவேலம்பாடி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 1 கோடியே 54 லட்சம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறையினர் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க கூடாது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு தார்சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகு 2022 ஜூலை மாதம் கருவேலம்பாடி கிராமத்திற்கு சாலை அமைக்க அதுவும் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது.

    இருந்தாலும் 21/2 கிலோமீட்டர் முதலில் சாலை பணியை தொடங்கி விடலாம் என்று ஊராகவளர்ச்சித் துறையினர் ஜூலை 15ஆம் தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ. வைத்து பூமி பூஜை போட்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் சாலை பணிகள் தொடங்கி ஜல்லி கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால்மீண்டும் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடம் எது என்று முதலில் அளவீடு செய்து வனத்துறையிடம் காண்பித்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாலைகள் போட வேண்டும் என்று கூறி வனத்துறையினர் மீண்டும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு இப்போது தான் சாலை வசதி வருகிறது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்று வீசியதால் மரக்கிளைகள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. #Kanyakumarirain
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மே மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக அணைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகியது.

    இதன் பிறகு கடந்த 10 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. அதன்பிறகு இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடி, மின்னலுடன் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    கோழிப்போர்விளை, முள்ளங்கினா விளை, ஆனைக்கிடங்கு போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த பகுதி களில் 4 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தக்கலையில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, கொட்டாரம், திற்பரப்பு, குலசேகரம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மலையோர கிராமங்களான கீரிப்பாறை, வெள்ளம்பி, காளிகேசம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்ததால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவிலிலும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நாகர்கோவிலில் இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    குளச்சல் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி குளச்சலில் உள்ள அண்ணா சிலை சேதம் அடைந்தது. மேலும் அருமனை, மிடாலம் பகுதிகளில் 2 வீடுகளும் மழை காரணமாக சேதம் அடைந்தது.

    கோதையாற்றில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையில் 73.55 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் 17.80 அடி தண்ணீர் உள்ளது. 496 கனஅடி தண்ணீர் வருகிறது. 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத் துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தக்கலை-153, கோழிப் போர்விளை-150, முள்ளங்கினாவிளை-138, இரணியல்-71, பாலமோர்- 66.8, புத்தன் அணை-54.2, பேச்சிப்பாறை-34.6, பெருஞ்சாணி-53.6, சிற்றாறு 1-52, சிற்றாறு 2-67, மாம்பழத்துறை யாறு-115, நாகர்கோவில்-78, பூதப்பாண்டி-24.2, சுருளோடு-60, கன்னிமார்-8.6, ஆரல்வாய்மொழி-4.2, மயிலாடி-45.2, கொட்டாரம்-52.4, ஆனைக்கிடங்கு-122, குளச்சல்-44.6, குருந்தன்கோடு-90.4, அடையாமடை-78, திற்பரப்பு-67.8.  #Kanyakumarirain

    ×