என் மலர்

    நீங்கள் தேடியது "Village people stir"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பா.ஊராலிப்பட்டி ஊராட்சி பூவம்பட்டி கிராமத்தில் கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்த போது யூனியன் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

    யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று பூவம்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வத்தலக்குண்டுவில் இருந்த ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் 1 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×