என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayawada-Sreesailam"

    • முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா-ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கடல் விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணா நதியில் பாதாள கங்கா படகு முனையத்தில் இருந்து கடல் விமான போக்குவரத்து தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தக் கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சாமி கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கடல் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வருகிற 9-ந் தேதி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் மேலும் சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    விசாகப்பட்டினம்-நாகார்ஜுன சாகர் , கோதாவரி உள்ளிட்ட இடங்களிலும் கடல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×