search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vignesh"

    • காக்காமுட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ்.
    • இவர் தற்போது ‘குழலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    காக்காமுட்டை, அறம், அப்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது இயக்குனர் செரா. கலையரசன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குழலி'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்திருக்கிறார்.


    விக்னேஷ்

    இப்படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கே.பி. வேலு, எஸ். ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமசந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு உருவாகி உள்ள 'குழலி' திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது, பின்னணி இசைக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளை பெற்றுள்ளது.


    குழலி போஸ்டர்

    இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தினை மொழி திரைக்களம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஏழைத்தாயின் மகனைக் காப்பாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கீழேரிபாளையத்தில் வசித்து வரும் எம்.விக்னேஷ், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாத தந்தை, வீட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தும் தாய் இருவருக்கும் விக்னேஷ்தான் ஒரே ஆறுதல். குறைந்த வருமானம் என்றாலும் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர்.

    இந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில் கடந்த 24-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒட்டுமொத்த குடும்பத்தையே உலுக்கிவிட்டது. விக்னேஷ் விபத்தில் சிக்கி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஈரோடு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேசை, டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஆபரேசன் செய்து உறைந்த ரத்தத்தை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து சுயநினைவின்றியே இருந்தார்.

    அதன்பின்னர், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய் பொருத்துவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.

    விக்னேஷ் மற்றும் அவரது தாயாரின் மொத்த வருமானம் மாதம் 15000 ரூபாய்தான். போதிய வருமானம் இன்றி தள்ளாடிய நிலையில், இப்போது மருத்துவச் செலவுகளால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அவரது குடும்பம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்துடன், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இதுவரை 3.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

    ஆனால், இன்னும் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இவ்வளவு தொகையை எப்படி திரட்டுவது என தெரியாமல் அவரது பெற்றோர் விழிபிதுங்கி நிர்கதியற்று நிற்கின்றனர்.


    ஏற்கனவே விக்னேஷின் தந்தைக்கு மருத்துவ செலவுகள் செய்வதற்கு கடன் வாங்கி உள்ளனர். அந்தக் கடனை அடைத்து குடும்பத்தை கரைசேர்க்க வேண்டிய விக்னேஷ், இப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடப்பதால், அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் தேவைப்படுகிறது. விக்னேஷின் உயிரைக் காப்பாற்ற உதவும்படி அவரது நண்பர் செய்யது முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் உதவியும், விக்னேஷின் உயிரைக் காப்பாற்றவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவும் உதவும். ஆன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் எதுதர்மா என்ற இணையதளத்தை பயன்படுத்தி பணம் செலுத்தலாம், அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் தொடர்புக்கு:-

    எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

    எதுதர்மா,
    ரத்னம் டெக்சோன்,
    பொள்ளாச்சி மெயின் ரோடு,
    ஈச்சனாரி,
    கோயம்பத்தூர்,
    தமிழ்நாடு- 641021
    +919600111639
    +919087766633 

    பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை ஏதுதர்மாவின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மாலை மலர் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.
    பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சேது’ படத்தை நினைத்து நினைத்து நடிகர் விக்னேஷ் வருத்தப்பட்டு வருகிறார். #Vignesh
    தமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்.

    இப்படம் குறித்து விக்னேஷ் கூறும்போது, ‘எனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்.

    பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.

    சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார். கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன். ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார். நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.

    படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.

    இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள் என்பது தான்.



    சேது படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்? என்று கேள்வி கேட்டோம். 

    அதை நினைத்து தினமும் வருத்தப்படுவேன். பாலாவும் நானும் ரூம் மேட்ஸ்.

    பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி. ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.

    இதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா...?

    நடிப்பேன். நடிப்பு தானே. சேது மாதிரி பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்’ என்றார்.
    ×