என் மலர்
நீங்கள் தேடியது "Victoria Public Hall"
- முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
- விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந்தேதி திறந்து வைத்தார்.
சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியானது, அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டிடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
* பொதுமக்கள் அனுமதி : விக்டோரியா பொது அரங்க அருங்காட்சியகக் கண்காட்சியை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
* முன்பதிவு முறை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://chennaicorporation.gov.in/gcc/] மூலம் VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
* கட்டணம்: இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட எவ்விதக் கட்டணமும் இல்லை.
* முக்கிய நிபந்தனை: இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
* நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம்.
* பார்வையாளர்கள் எண்ணிக்கை: ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* கலை அரங்கம்: விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
* நிகழ்ச்சிகளுக்கான அனுமதி: கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி உறுதி செய்யப்படும்.
- சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
- 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திய கட்டடம்
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்துக்குள் விக்டோரியா அரங்கம் அமைந்துள்ளது. 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் சென்னையின் மிகப்பெரிய முதல் கூட்ட அரங்கமாகவும், நாடகம், திரைப்பட அரங்கமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்த அரங்கம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் பழைமையானதால் சேதமடைந்து காணப்பட்டது. அதை பழைமை மாறாமல் புதுப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. புரனமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விக்டோரியா அரங்கத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து ரூ.74.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி புதிய மன்றக் கூடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
- விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன
- புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று விக்டோரியா பப்ளிக் ஹால்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும்- மாநகராட்சி கட்டிடத்துக்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
1882-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், சென்னைக்கு பொதுவாக ஒரு அரங்கு கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 1890-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் ரூ.16,423 செலவில், சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 57 கிரவுண்ட் பரப்பளவில் விக்டோரியா பொது அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த ஆண்டு இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றிருந்தது. அதற்கான பொன் விழாவை ஆங்கிலேயர் அரசு கொண்டாடியது. இந்த விழா தொடங்கும் போது, இந்த கட்டடப் பணிகளும் நிறைவடைந்திருந்ததால், இந்த கட்டடத்திற்கு 'விக்டோரியா பப்ளிக் ஹால்' என்று ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் சென்னை மாநகரத்தின் கலையரங்கமாகவும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடமாகவும் மாறியது விக்டோரியா ஹால். 1893 -ம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் முதல் கூட்டம் விக்டோரியா அரங்கத்தில் தான் கூட்டப்பட்டது. 1897 -ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு பொதுக்கூட்டம் நடத்தி சொற்பொழிவாற்றியதும் உண்டு.
திராவிட கட்சிக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சி முதன்முதலில் தனது பொதுக்கூட்டத்தை நடத்தியது விக்டோரியா ஹாலில் தான்.
மூன்று தளங்கள் கொண்ட இந்த விக்டோரியா அரங்கில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கீழ்த்தளத்தில் மியூசியமும், நூலகமும் இருந்தன. முதல் தளத்தில் நாடகங்களும் பல கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி, கலைகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விக்டோரியா அரங்கம் கட்டப்பட்டதாகவும், சென்னையில் முதன் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இவ்வளவு பெருமைகளையும் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தை, சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2023-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
தற்போது வரை, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, மரத்தளம் மற்றும் மரப்படிகட்டுகள் சீரமைப்பு, கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய பகுதிகள் சீரமைப்பு, கட்டடத்தின் மையப் பகுதியில் உள்ள கலை அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவது போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டடம் முழுவதும் காண்போரை கவரும் வகையில், முகப்பு விளக்குகள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. முதல் தளத்தில் முக்கியஸ்தர்களின் நிர்வாக இடமாகவும், கலாச்சார இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விக்டோரியா ஹாலில் மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
அதே போல், கட்டடத்தின் சுவர்களை சீரமைப்பது, சுண்ணாம்புப் பூச்சு வேலை, மரத்திலான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, முதல் தளத்திலிருந்து மேல் தளங்களுக்கு செல்ல நவீன முறையில் "கண்ணாடி லிப்ட்" அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது கட்டடத்திற்கு வண்ணம் பூசுதல், ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட சில வேலைகள் மட்டுமே உள்ளன. மேலும், கட்டிடத்தின் வெளிப் பகுதியில் பசுமையான புல் தரைகள், கட்டடத்தைச் சுற்றியும் சிமெண்டில் ஆன இன்டர் லாக்கிங் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன"
புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது. அதனால் விக்டோரியா ஹாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அடுத்த மாதம் திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






