search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam farmer suicide"

    வேதாரண்யம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினம் மருதூர்வடக்கு மச்சக்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி சவுந்தரலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வயதான காலத்தில் குழந்தை இல்லாததால் கஷ்டப் படுகிறமோ? என்று தங்கராசு நினைத்து மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த தங்கராசு, தனக்கு பின் வாரிசு இல்லையே என்று ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தங்கராசு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கரியாபட்டினம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×