search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varushabhiseka ceremony"

    • சிவகிரி அழுக்குச்சுவாமி சித்தர் பீடத்தில் சதயம் நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக மீன லக்கனத்தில் வருஷாபிசேக விழாவை நடைபெற்றது.
    • வருஷாபிசேக விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மாநில துணை தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அழுக்குச்சுவாமி சித்தர் பீடத்தில் சதயம் நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக மீன லக்கனத்தில் வருஷாபிசேக விழாவை நடைபெற்றது. சிவகிரி ஸ்ரீ அழுக்குச்சுவாமி சித்தர் கோவில் வருஷாபிசேக விழா முன்னிட்டு அன்னதானத்தை மாநில துணை தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் தொடங்கி வைத்தார்.

    உடன் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் வேல்முருகன், ஒன்றிய துணைத்தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சிவனடியார்களும், பெரியோர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குருசாமி பாண்டியன், வார்டு கவுன்சிலர் விக்னேஷ், பூசாரி குமார், விஸ்வகர்மா சங்க தலைவர் நாகராஜ், சக்கரவர்த்தி, முருகேசன், ராமராஜ், சித்ரா, நல்லசிவன், அழுக்கு ராஜா, காசிராஜன், அழுக்குச்சுவாமி சித்தர் திருப்பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×