search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallliyur"

    • சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
    • விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல், பேச்சுப்போட்டி நடை பெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 90-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு வியாபாரிகள் சங்க தலைவர் என்.முருகன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் எஸ்.ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோவின் பார்ச்சுனேட் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை வாசித்தார். சங்க ஆடிட்டர் சீராக் இசக்கியப்பன் சங்க கணக்குகள் முறையாக சரியாக இருப்பதாக அறிக்கை அளித்தார். ஆடிட்டர் சந்யானந்த சுப்பிர மணியன் அறிக்கை யை ஜோசப் வாசித்தார். பின்னர் நிர்வாகிகள் அருணா, பாலமுருகன், சிதம்பரகுமார், ஜீவா, கணேசன், கார்த்தீசன், செலின், ராஜேந்திரன், சேதுராமலிங்கம், சுரேஷ், சங்கரன், ரவிசங்கர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானி க்கப்பட்டது. வள்ளியூர் அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூர் வந்து செல்ல நடவடிக்கை எடுத்த சபாநாயகர் அப்பாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பஸ்நிலைய கட்டுமானப் பணியையும், சந்தை கட்டுமானப்பணியையும் விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக வியாபாரிகளின் குழந்தைகளில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மற்றும் 2-ம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும்,கேடயமும் வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும் ,கேடயமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாபாரிகளின் குடும்ப விழா கொண்டாடப் பட்டது.

    இவ்விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல் மற்றும் பேச்சுப்போட்டி நடை பெற்றது. போட்டிகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, பேரூராட்சி தலைவி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், பங்கேற்ற அனை வருக்கும் பரிசு வழங்க ப்ப ட்டது. துணைத் தலை வர் ரா தா கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செய லாளர் எம்.காதர்மைதீன் நன்றி கூறினார்.

    ×