search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallabhi Seva"

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சேவை விழா நடந்தது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சக்திவேல் தலைமையில் நடந்தது. முனியசேகர் முன்னிலை வகித்தார். கண்ணபிரான் வரவேற்றார். ராமநாதபுரம் ராமலிங்க சேவாபாரதி அன்பு இல்ல நிர்வாகி மோகன் மற்றும் வல்லபை உறுப்பினர்கள் பேசினர்.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவர் மோகன் தொகுப்புரையாற்றினார். 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. வெண்மதிநாதன் நன்றி கூறினார். அன்னதானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    ×