search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "valaithandu recipes"

    சர்க்கரைநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் சக்தியும் கொண்டது வாழைத்தண்டு. இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - சிறிய துண்டு,
    தேங்காய் - 1 பத்தை,
    தனியா - கால் டீஸ்பூன்,
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - இரண்டு,
    பூண்டு - நாலு பல்,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.



    செய்முறை :  

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.

    பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.

    கடைசியில் கடுகு தாளித்து கொட்டி அரைத்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×