search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiphavam"

    • ப‌ரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    அதற்காக பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    உற்சவர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருமண விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×