search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiapuri"

    • மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • இந்த கூட்டத்தில் நடிகர் வையாபுரி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9.30 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டா டப்படுகிறது. பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மதுரை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வா கிகள், சார்பணி நிர்வாகிகள், முன்னோடிகள், பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் பழங்காநத்தத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் நடிகர் வையாபுரி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்திலும் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×