என் மலர்
நீங்கள் தேடியது "Uthukottai bus"
ஊத்துக்கோட்டையில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஷகிலா இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்தம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் நடைபெற்றது.
இதில் ஷகிலா குழந்தைகளுடன் கலந்து கொண்டார். பின்னர் ஊத்துக்கோட்டைக்கு புறப்பட்டார். அப்போது அவரது பெற்றோர் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் கொடுத்தனர்.
அதனை ஷகிலா பையில் வைத்து கொண்டு தனியார் பஸ்சில் ஏறி ஊத்துக்கோட்டைக்கு வந்தார். அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்குள்ள கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பையை திறந்து பார்த்தார். அப்போது ரூ.20 ஆயிரம் இருந்த மணிபர்சை காணவில்லை. செல்போனும் மாயமாகி இருந்தது.
பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பஸ்சில் பயணம் செய்த போது பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஷகிலா ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஷகிலா இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்தம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் நடைபெற்றது.
இதில் ஷகிலா குழந்தைகளுடன் கலந்து கொண்டார். பின்னர் ஊத்துக்கோட்டைக்கு புறப்பட்டார். அப்போது அவரது பெற்றோர் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் கொடுத்தனர்.
அதனை ஷகிலா பையில் வைத்து கொண்டு தனியார் பஸ்சில் ஏறி ஊத்துக்கோட்டைக்கு வந்தார். அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்குள்ள கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பையை திறந்து பார்த்தார். அப்போது ரூ.20 ஆயிரம் இருந்த மணிபர்சை காணவில்லை. செல்போனும் மாயமாகி இருந்தது.
பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பஸ்சில் பயணம் செய்த போது பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஷகிலா ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






