search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Secretary"

    சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். #SaudiKingSalman #MikePompeo
    ரியாத்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார்.



    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், “ சவுதி மன்னரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், எங்கள் சவுதி அரேபிய குடிமகனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அவர் இந்தப் பிரச்சினையில் விடை காண்பதற்கு துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மன்னரை சந்தித்துப் பேசுதற்காக வெளியுறவு மந்திரியை அங்கு (சவுதி அரேபியா) உடனே அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி அவர் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சவுதி அரேபியா அனுப்பினார்.

    நேற்று ரியாத் போய்ச் சேர்ந்த மைக் பாம்பியோ, சவுதி மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் மைக் பாம்பியோ சந்தித்து விட்டு துருக்கி நாட்டுக்கு விரைகிறார்.

    இதற்கு மத்தியில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி சவுதி அரேபியாவும், துருக்கியும் தெரிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பசேலெட் வலியுறுத்தி உள்ளார். #SaudiKingSalman #MikePompeo 
    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) பாகிஸ்தான் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #USForeignMinister #Pakistan
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான்-அமெரிக்கா உறவில் லேசான விரிசல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப், அந்த நாட்டு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.



    பயங்கரவாதிகள் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டிய டிரம்ப், வெறும் பொய்யும், ஏமாற்று நடவடிக்கைகளிலேயே அந்த நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சாடினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை குறைக்க வகை செய்யும் மசோதா ஒன்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இவ்வாறு விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் நேற்று முன்தினம் பதவியேற்று உள்ளார். அவர் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ளார். கடந்த மாதம் தனது வெற்றி உரையில்கூட இதை குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் பதவியேற்பை வரவேற்றுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானின் வளம் மற்றும் அமைதி மேம்பாட்டுக்காக புதிய ஜனநாயக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக செய்தி வெளியிட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் பாகிஸ்தான் வருவதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 5-ந்தேதி பாம்பியோவின் இஸ்லாமாபாத் பயணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் வரும் மைக் பாம்பியோ புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஆதரவு குறித்தும் மைக் பாம்பியோ பேசுவார் என கூறப்படுகிறது.

    இதன் மூலம் இம்ரான்கானை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை மைக் பாம்பியோ பெறுகிறார். அவருடன் அமெரிக்காவின், தெற்கு ஆசியா விவகார துறைக்கான தலைவர் ஆலிஸ் வெல்ஸ் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் பாகிஸ்தான் வருகின்றனர்.

    இதற்கிடையே பாகிஸ்தானின் புகழ்பெற்ற பஞ்சாப் மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த மாகாண முதல்-மந்திரியாக உஸ்மான் பஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  #USForeignMinister #Pakistan

    ×