search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Gun Culture"

    • துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய மாணவன் தற்கொலை செய்து கொண்டான்
    • உடனடியாக சட்டங்களை இயற்றுவது உணர்ச்சிகரமான தீர்வு என்றார் விவேக்

    அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது, அயோவா (Iowa) மாநிலம்.

    இம்மாநில தலைநகரான டெஸ் மாயின்ஸ் (Des Moines) நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெர்ரி உயர் நிலை பள்ளி (Perry High School).

    நேற்று காலை இங்கு நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் அப்பள்ளி தலைமை ஆசிரியர்.

    துப்பாக்கிச் சூட்டை நடத்திய டைலன் பட்லர் (Dylan Butler) எனும் 17 வயது மாணவர் தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்தான்.

    அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

    சில வருடங்களாக அமெரிக்காவில் பள்ளி வளாகங்களில் இது போன்று நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

    கடந்த 2023ல், அமெரிக்காவில், பள்ளி வளாகங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 82 என தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அடங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 37 ஆகும்.

    பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இத்தகைய சம்பவங்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு தேடி வரும் விவேக் ராமசாமி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையாகும். இப்பிரச்சனை அடிப்படையில் மனநலம் சம்பந்தப்பட்டது.

    சமூகத்தில் உள்ள ஆழமான பிரச்சனைகளே இதற்கு காரணம்; துப்பாக்கிகளின் எண்ணிக்கை அல்ல. பிரச்சனையின் வேர் வரை சென்று அதை தீர்க்க முனையாமல் இருப்பது தவறான அணுகுமுறை.

    ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக ஒரு சட்டமியற்றுவதும் நாங்களும் ஏதோ செய்து விட்டோம் என கூறுவதும் வெறும் உணர்ச்சிகரமான தீர்வு.

    இன்றோ, நாளையோ "துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்" எனும் கூக்குரல் அதிகரிப்பதை பார்க்கத்தான் போவீர்கள்.

    "காரணமின்றி செயல்படுதல்" எனும் நோய் நமது சமூகத்தின் இதயம் மற்றும் உயிரிலும் கலந்து விட்டது.

    இவ்வாறு விவேக் கூறினார்.

    இப்பகுதிக்கு அருகே நடைபெறுவதாக இருந்த தனது பிரச்சார கூட்டத்தை இச்சம்பவத்தினால் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை கூட்டமாக விவேக் ராமசாமி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை சம்பவங்களில் நிகழ்ந்தவை
    • மாஸ் ஷூட்டிங் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன

    இவ்வருட தொடக்கம் முதல் கடந்த டிசம்பர் 7 வரை அமெரிக்காவில் 40,167 பேர் துப்பாக்கி சூட்டில் நிகழும் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் எனும் விகிதத்தில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவர்களில் 1306 பேர் பதின் வயதுக்காரர்கள்; 276 பேர் குழந்தைகள்.

    இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைகளால் (22,506) நிகழ்ந்தவை.

    டெக்ஸாஸ், கலிபோர்னியா, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, வடக்கு கரோலினா, இல்லினாய்ஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில்தான் இவை அதிகம் நடந்துள்ளன. பணியின் போது உயிரிழந்த 46 காவலர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.

    "மாஸ் ஷூட்டிங்" எனப்படும் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் சுடப்படும் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன.

    ஆண்டுதோறும் நிகழும் துப்பாக்கி கலாச்சார உயிரிழப்புகள், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து கொண்டே செல்வதால் இதை தடுக்க அமெரிக்க அரசு முனைய வேண்டும் என உளவியல் வல்லுனர்களும், காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர்.

    • சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
    • வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

    வெள்ளை மாளிகைக்கு கிழக்கே, 20 நிமிட பயணத்தில் அடையக்கூடிய ஒரு பகுதியில், அதிகாலை 01:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10-வயது மற்றும் 17-வயதுடைய இருவர் இருந்தனர். அனைவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களோ, வேறு எந்த விவரமோ காவல்துறை தெரிவிக்கவில்லை. டீன்வுட் அருகே சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    "இது போன்ற வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது", என்று பெருநகர காவல்துறை உதவித்தலைவர் லெஸ்லி பார்சன்ஸ், தெரிவித்தார்.

    "நம் மக்களிடம் ஏராளமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. அதே போல பல வன்முறையாளர்கள் தெருக்களில் உள்ளனர்" என வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்டிமோர் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் மர்ம நபர் ஒருவர் 30 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திங்கட்கிழமை இரவு, பிலடெல்பியாவின் தெருக்களில் குண்டு துளைக்காத மேலாடை அணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

    திங்கட்கிழமை பின்னிரவு, டெக்சாஸ் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மீது பலர் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். வருடந்தோறும் நடைபெறும் கோமோஃபெஸ்ட் கொண்டாட்டங்கள் முடிந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு கோமோ பகுதியின் ஃபோர்ட்வொர்த் சுற்றுவட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    புளோரிடா மாநிலத்தில், தம்பா விரிகுடா பகுதியை கடக்கும் ஒரு தரைப்பாதையில், ஜூலை 4 கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் காயமடைந்தார். மேலும் ஒரு 7-வயது குழந்தை கொல்லப்பட்டது.

    அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அமெரிக்க மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர்.
    • சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்" என தெரிவித்தார்.

    இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான்.

    அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×