search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uncle struck"

    தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தர மறுத்த மாமனாரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கட்டப்புளி(வயது 37). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யாச்சாமி(54) என்பவரது மகளை திருமணம் செய்துள்ளார். கட்டப்புளிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.   

    இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக அய்யாச்சாமி சென்றுள்ளார். அப்போது கட்டப்புளி மதுகுடிக்க பணம் தருமாறு  அய்யாச்சாமியிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கட்டப்புளி, அய்யாச்சாமியை அடித்து, உதைத்துள்ளார்.   

    இதில் காயமடைந்த அவர் இது குறித்து முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கட்டப்புளியை கைது செய்தார்.
    ×