search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayakumar participation"

    • வாடிப்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தமிழக அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பேரூர் செயலா ளர் டாக்டர் கே.எஸ். அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.வீ. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேச ன், அரியூர் ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார். கவுன்சிலர் கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இந்த விடியா அரசு அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கி விட்டது.

    கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும். அவரை நீக்கும் வரை அ.தி.மு.க.வில் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மருதையா, ரவி செல்வராஜ், பொன்ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் துணை செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.

    ×