search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udangudi Area"

    • உடன்குடி வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட 17 ஊராட்சி மன்ற பகுதிகள் மற்றும் ஒரு நகரப் பகுதிகள் உட்பட சுமார் 5,000 ஏக்கரில் பல்வேறு விவசாயம் ஆண்டு தோறும்நடைபெறுவது வழக்கம்.
    • தொடர்மழை மற்றும் சாரல் மழை விட்டு விட்டு பெய்வதையொட்டி இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது புதிய நடவு விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    உடன்குடி:

    கோடைகாலத்தில் வழக்கமாக தென்னை, பனை, முருங்கைஆகியவற்றை பராமரித்து வருவார்கள். ஆனால் புதியதாக மழைக்காலம் ஆரம்பித்த பின் தான் நடவு செய்வார்கள்.

    தற்போது தொடர்மழை மற்றும் சாரல் மழைவிட்டு விட்டு பெய்வதையொட்டி இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள்தங்களது புதிய நடவு விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். புதியதாக தென்னை, பனை, முருங்கை, வாழை, சப் போட்டா, கடலை மற்றும் ஊடுபயிர்கள் எனபல பயிரிட ஆரம்பித்து விட்டனர். இதற்காகவிவசாய நிலங்களில் உள்ள வேண்டாத செடி, கொடிகளை அப்புறப்படுத்தி விட்டு நிலத்தை கொத்தி பக்குவப்படுத்தி புதியதாக நடவு செய்து விவசாய பணிகளை பல இடங்களில் தொடங்கி உள்ளனர்.

    ×