search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck collisions"

    • லாரி விழுப்புரம் அருகே பெரங்கியூர் பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 லாரி யையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    விழுப்புரம்:

    சென்னை நங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 32). பார்சல் லாரி டிரைவர். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருட்கள், சில்வர் உள்ளிட்ட பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றார். அப்போது விழுப்புரம் அருகே பெரங்கியூர் பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது பின்னால் வேகமாக கோதுமை ஏற்றி வந்த லாரி, பார்சல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பார்சல் லாரி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரை வர் மற்றும் கிளீனர் படுகாயம் அடைந்தனர்.

    லாரிகள் இரண்டும் பலத்த சேதமாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், ரோந்து போலீசார் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பார்சல் லாரி டிரைவர் வரதராஜ் மற்றும் பின்னால் வந்து மோதிய லாரியின் டிரைவர் ஜெபஸ்டீன் ஆகியோரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 லாரி யையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×