என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Trichiluvai Tiruthalam"
- திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சி கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்று உள்ளது.
இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444- வது ஆண்டு மகிமை பெரும் திருவிழா இன்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திரு விழா தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் வழங்கி, மறையுறை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் அப்பம் வழங்கினார். இதில் ஊர் மக்கள் அனைவரும், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக் கிறது.
விழாவின் முக்கிய நாட்க ளான 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6,30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு சிறப்பான வரவேற்பு, மாலை பெரும் விழா மற்றும் மாலை ஆரா தனை சிறப்பு மறையுறை நடக்கிறது.
14-ந்தேதி (வியாழக் கிழமை) மகிமை பெரு விழாவையொட்டி அதி காலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலியும், 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமை பெரும் விழா நிகழ்ச்சி, புதிய சபையினர் தேர்வு செய்தல், மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது, திருவிழாவில் முக்கியமான நாட்களான 13 மற்றும்
14-ந்தேதி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளா வில் இருந்தும் இறை மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஏராளமான மக்கள் கார், பஸ், வேன் போன்ற வாக னங்களில் குடும்பத்துடன் வந்து 2 நாள் தங்கியிருந்து திருப்பலியில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
