search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treatment of 56 people"

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    அதிலும் குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆக பதிவாகி வந்தது.

    இந்நிலையில் நேற்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

    மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 054 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து குணமடைந்து வருகின்றனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 735 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×