search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport employee house jewelry robbery"

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போக்குவரத்து ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் பாட்டகுளம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் கணேஷ் குமார்.

    இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி முள்ளி குளம் கிராமத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 15 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் கேமிரா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கணேஷ்குமார் வீடு திரும்பியபோது நகை-பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

    போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    ×