என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transfer of 4 policemen"

    • 2 பேரையும் ஆயுத ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
    • போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்தவர் துரைசாமி. கோவில் பிரச்சனையை முறையாக கையாளாமல் நடவடிக்கையில் மெத்தனம் காட்டியதாக புகார் எழுந்தது.

    இதேபோல் கருங்கல் பாளையம் போலீஸ் நிலை யத்தில் தனிப்பிரிவு ஏட்டு நித்தியானந்தம் சட்டவிரத செயல்கள் பற்றி உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்தது.

    இதையடுத்து 2 பேரையும் ஆயுத ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதைபோல் தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் மான் இறைச்சியை கடத்தி வந்தவர்களிடம் மான் இறைச்சி மற்றும் பணம் பெற்று கொண்டதாக புகார் எழுந்தது. போலீஸ் விசாரணையில் இது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அவர்களை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×