என் மலர்
நீங்கள் தேடியது "Training for seed producers"
- சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
- விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட ங்களை ேசர்ந்த தனியார் விதை உற்பத்தி யாளர்கள் விதைப்பண்ணை அமைத்துள்ளனர்.
இவ்விதை உற்பத்தியாளர்களுக்கு சிவகிரியில் இயங்கி வரும் ஈரோடு துல்லிய பண்ணைய நிறுவன கூட்ட அரங்கில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தலைமை யில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் போது விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய விதை நேர்த்தி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பம், கலவன்களை அகற்றும் முறைகள், வல்லுநர் விதைகளைக் கொண்டு திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்தல், நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழல் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்.
மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட இரகங்களான ஏடிடி 51, ஏடிடி 54, கோ 54, கோ 55 மற்றும் ஏஸ்டி 21 ரகங்களின் சிறப்பியல்புகள், பயிரிப்பட வேண்டிய பருவங்கள் பற்றியும் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் விதை சான்று அலுவலர் மாரிமுத்து விதைப்பண்ணையை பதிவு செய்யும் முறைகள், வயல் மட்ட விதைகளை முத்திரையிட்டு விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார்.
மேலும் நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் அவற்றின் மேலாண்மை முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலவலர்களான கவிதா, நாகராஜ், ஹரிபிரசாத், ஹேமாவதி, நாசர் அலி, தமிழரசு மற்றும் ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடேட் திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.






