search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toxic gas"

    • பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    • விஷ வாயு தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் கிணற்றை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவை சுவாசித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றை சுத்தம் செய்ய 4 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் முதலில் ஜெய்பாலும், நரேந்திரனும் கிணற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் கிணற்றுக்குள் ஏற்பட்ட நச்சு வாயுவை சுவாசித்து சுயநினைவை இழந்துள்ளனர். பின்னர், சுரேஷூம், விக்ரமும் உள்ளே இறங்கினர். இதில் சுரேஷூம் விஷ வாயுவை சுவாசித்து மயங்கினார். இதனால், விக்ரம் உடனடியாக கிணற்றில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை கடந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டது.

    இங்கு அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள படேரு மற்றும் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஆகிய 7 தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தனர்.

    இவர்கள் இன்று காலை தொழிற்சாலையில் இருந்த தொட்டி ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொட்டியில் உள்ளே கசடுகளை அகற்ற உள்ளே இறங்கினர்.

    அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 7 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    எண்ணெய் தொழிற்சாலை, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. நச்சு வாயு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பலியான 7 பேர் ஏணியைப் பயன்படுத்தி தொட்டியில் நுழைந்ததும் அவர்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    தொட்டியில் ஏறிய பிறகு மூச்சு விட முடியவில்லை என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.

    தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு காக்கிநாடா எஸ்.பி. ரவிந்தரநாத் பாபு மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×