search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Panchayt Presidene"

    • ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவரின் சார்பில் பெண் கவுன்சிலர்கள் அனைவருக்கும் தலா ரூ.3,500 மதிப்புள்ள புடவை பரிசாக வழங்கப்பட்டது

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அ.கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் தயாவதி வரவேற்று பேசினார். மகளிர் சாதனைகளும் சிறப்புகளும் என்ற தலைப்பில் அலுவலக பணியாளர் வரலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.

    நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் நடந்தன. பெண் வார்டு கவுன்சில ர்களின் சார்பில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவரின் சார்பில் பெண் கவுன்சிலர்கள் அனை வருக்கும் தலா ரூ.3,500 மதிப்புள்ள புடவை பரிசாக வழங்கப்பட்டது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய குரூஸ் நகர் பிச்சையம்மாள் (70) என்கிற மூதாட்டிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வார்டு கவுன்சிலர்கள் மாரியம்மாள், ரமா, புனிதா பெரியசாமி, புனிதா சேகர், ஜெயராணி, மரிய நிர்மலா தேவி, சகாயரமணி, சோ. வெங்க டேசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது. கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.

    சிவந்தி கல்லூரி

    சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டா டப்பட்டது. கல்லூரி தாளாளர் சிவந்தி முருகேசன் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது . விழாவில் கல்லூரி முதல்வர் பாஸ்கர் ராஜ்பால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கலை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயக்குமாரி கலந்து கொண்டு பெண்களுக்கு தேவை யானது தன்னம்பிக்கை என்பதை, கவிதை வாயிலாகவும் சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக அழகர் ஜுவல்லர்ஸ் ஆனந்தராஜ் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்ப டுத்தி பரிசுகளை வழங்கினார். சேதுபதி, சேது குற்றாலம், ராஜ்குமார், அரிஸ் டாட்டில், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    விழாவினை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஸ்டெல்லா மேரி மற்றும் ஒய்.ஆர்.சி. ஒருங்கிணை ப்பாளர் மலர்மாலை மற்றும் உறுப்பி னர்கள் நடத்தி னார்கள். மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×