search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato prices fallen sharply"

    • உச்சாணிக்கொம்பில் இருந்து அதலபாளத்துக்கு சரிந்தது
    • மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து உரிய விலை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம், 

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, கெம்மராம்பாளையம், தோலம்பாளையம், மருதூர், பெள்ளாதி, ஓடந்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அங்கு உள்ள வி வசாயிகள் கறிவேப்பிலை, கத்தரி, தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    இங்கு விளையும் பொருட்களை விவசாயிகள் மேட்டுப்பாளையம், காரமடை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் குடும்பத்த லைவிகள் மிகுந்த கவலை க்கு ஆளாகினர். அந்தளவுக்கு தக்காளியின் விலை அப்போது உச்சா ணிக்கொம்பில் இருந்தது.ஆனால் இன்றைக்கு அதே தக்காளியின் விலை தற்போது அதலபாளத்துக்கு சரிந்து உள்ளது. மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தேக்கம்ப ட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னராஜ் என்பவர் கூறு கையில், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டா ரப்பகுதிகளில் விலை அதிக மாக விற்றதன் காரணமாக, நாங்கள் அதிக பரப்பளவில் தக்காளி பயிரிட்டோம். இதனால் தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனையான தக்காளி, தற்போது ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது 25-27 கிலோ டிப்பர் ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    மேட்டுப்பாளையம் பகுதியில் ஏற்கனவே வேலையாட்கள் கூலி, உரம், நடவு கூலி அதிகரித்து உள்ளது. எனவே தக்காளி சாகுபடியில் சொற்பமான தொகையே வருவாயாக கிடைத்து வந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலைவீழ்ச்சி எங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தோட்டத்தில் பறித்த தக்காளியை இருப்பு வைத்து விற்கவும் முடியாது. மேலும் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தக்காளி விரைவில் அழுகி விடும். எனவே கிடைக்கின்ற விலைக்கு விற்று வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து, அதற்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    ×