search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "To the Lord"

    • பரமத்திவேலூரில்‌ மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
    • நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு ‌‌பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிவகாமித்தாயார் உடனுறை நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடல்கள் பாராயணம் நடைபெற்றது. 10 மணிக்கு 2-ம் கால வழிபாடும்,12 லிங்கோத்பவர் சிறப்பு வழிபாடும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால வழிபாடும் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமி தாயார் உடனுறை நவராஜ பெருமான் பள்ளியரை வழிபாடும், 6 மணிக்கு 4-ம் கால வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×