search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "To drink"

    • குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.
    • மனம் உடைந்த ராமு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி விஜயமண்டப தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 23 ).

    சமையல் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனம் உடைந்த ராமு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சைக் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×