search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC Group"

    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். #TNPSC

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தனியார் டி.வி. சேனல் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த திருநங்கை சுவப்னா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த தேர்வு முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம்ராஜேஸ்வரன், சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, முன்ஜாமீன் பெற்றார்.

    இவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சாம் ராஜேஸ்வரன் முறைகேடாக மாணவர்கள் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கீழ் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளதால், விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

    இதையடுத்து, அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சாம் ராஜேஸ்வரனுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார்.

    ×