search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Post Office"

    • மண்டல மேன்மை விருது வழங்கும் விழா எழும்பூரில் நடந்தது.
    • இந்த விழாவில் 75 விருதுகள் வழங்கப்பட்டன.

    சென்னை :

    தபால் துறையின், சென்னை நகர மண்டலத்தில் 2021-22-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய கிளைகள், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 'மண்டல மேன்மை விருது' என்ற பெயரில் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

    இந்த விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் பி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், இந்த விழாவில் 75 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் 25 விருதுகள் கோட்டங்கள், உட்கோட்டங்கள், அஞ்சல் அலுவலகங்களுக்கும், 50 விருதுகள் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டன.

    தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை பொறுத்தவரையில், சிறப்பாக பணியாற்றிய தபால்காரர், டிரைவர், துறை முகவர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் சிறந்த தபால்காரருக்கான விருதை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தின் தபால்காரர் டி.சந்தியாவுக்கும், அதேபோல், மண்டலத்தில் சிறந்த பெண் ஊழியருக்கான விருதை ஷகிலாவுக்கும் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    மேலும், வருவாய் ஈட்டுவதில் சிறந்து விளங்கும் கோட்டங்களில் தாம்பரம், வடசென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.

    விழாவில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் பி.செல்வகுமார் பேசுகையில், "தபால்துறையில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசின் வீடுதோறும் மூவர்ணம் என்ற திட்டத்துக்காக தமிழக தபால் துறை மூலம் 9 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு, அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடியின் தரத்தில் பிரச்சினை வந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு 'டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்'டை தபால் துறை வீடு தேடி சென்று வழங்கி வருகிறது. இதுவரை 1½ லட்சம் பேருக்கு குறுகிய காலத்தில் வழங்கி சாதனை செய்துள்ளோம்'' என்றார்.

    ×