search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur Suicide"

    திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சிகா (வயது 28). திருநங்கை. இவர் தனது சக திருநங்கைகளுடன் திருவாரூர் அருகே மாங்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    காலை வின்சிகா, ஆண்டிரியா என்பவரும் சேர்ந்து திருவாரூர் வந்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தில் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதியிலே வின்சிகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மாலை ஆண்டிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வயிற்று வலி காரணமாக மனவேதனை அடைந்த அரசு பஸ் நடத்துனர் தற்கொலை செய்து கொண்டார்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கீழகரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 46). இவர் நன்னிலம் கிளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×