search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நன்னிலம் அருகே வயிற்று வலியால் அரசு பஸ் நடத்துனர் தற்கொலை

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வயிற்று வலி காரணமாக மனவேதனை அடைந்த அரசு பஸ் நடத்துனர் தற்கொலை செய்து கொண்டார்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கீழகரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 46). இவர் நன்னிலம் கிளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×