search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Old Bus Station"

    • பனியன் தொழில் நகரான திருப்பூருக்கு தினமும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளால் அச்சுறுத்தலும் உள்ளது. பருவ மழை காலம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரின் மைய பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. தற்போது அங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    பனியன் தொழில் நகரான திருப்பூருக்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பஸ் நிலைய கட்டுமான பணியாலும், நெருக்கடியை குறைக்கும் வகையிலும் பஸ் நிலையத்தை 4 பகுதிகளில் இருந்து இயக்கி வருகிறது.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே இருந்து சேலம், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு மட்டும் தனியாக பஸ் நிலையம் இயங்கி வந்தது. இன்று முதல் அங்கிருந்து இயக்கப்பட்ட ஈரோடு, சேலம், திருவண்ணாமலை பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் மார்க்கம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கரூர், திருச்சி, வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இப்படி 4 இடங்களில் பஸ் நிலையம் இருப்பதால் பயணிகளுக்கு அவதியாக உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலவுவதால் குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்சை உரிய நேரத்தில் பிடிக்க முடியாமல் பயணிகள் தவற விடுகிறார்கள். தற்காலிக பஸ் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் அச்சுறுத்தலும் உள்ளது. பருவ மழை காலம் தொடங்க உள்ளது.

    எனவே பயணிகள் நலன் கருதி பழைய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×