search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppur youth murder"

    திருப்பூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி திருக்குமரன் நகரை சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு கிணறும் இருக்கிறது.இன்று காலை பாலு தனது தோட்டத்திற்கு சென்றார். மோட்டாரை இயக்க கிணறு பகுதிக்கு சென்ற போது அங்கு வாலிபரின் ஆடைகள் கிடந்தது.இதனை தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு 21 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து பாலு வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் கிடந்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் தேனியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (21) என்பதும் வீரபாண்டி பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    இந்த கிணறு இருக்கும் பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே வாலிபர் ஹரிகிருஷ்ணனை யாராவது இங்கு அழைத்து வந்து கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு ஆடைகளை கரையில் போட்டு சென்றார்களா? அல்லது கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×