என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்து வீசப்பட்டாரா? - போலீஸ் விசாரணை
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி திருக்குமரன் நகரை சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு கிணறும் இருக்கிறது.இன்று காலை பாலு தனது தோட்டத்திற்கு சென்றார். மோட்டாரை இயக்க கிணறு பகுதிக்கு சென்ற போது அங்கு வாலிபரின் ஆடைகள் கிடந்தது.இதனை தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு 21 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து பாலு வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் கிடந்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் தேனியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (21) என்பதும் வீரபாண்டி பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த கிணறு இருக்கும் பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே வாலிபர் ஹரிகிருஷ்ணனை யாராவது இங்கு அழைத்து வந்து கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு ஆடைகளை கரையில் போட்டு சென்றார்களா? அல்லது கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்