என் மலர்
நீங்கள் தேடியது "Thulangumpathi thuvarayampathi"
- இன்று நள்ளிரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளுகிறார்.
- இரவு 8 மணிக்கு அய்யா வழி ஆன்மீக வழிபாடு சிவசந்திரனின் கச்சேரி நடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட தலைமைபதி என்றழைக்கப்படும் அம்பை அய்யனார் குளம் துலங்கும்பதி துவரயம் பதியில் பங்குனி பெருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் முன்பு நடப்பட்டுள்ள 75 அடி உயர ராஜ கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
விழாவை தொடர்ந்து இன்று நள்ளிரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளுகிறார். தொடர்ந்து நாளை முதல் வருகிற 3-ந்தேதி வரை தினமும் காலை பணிவிடையும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் நடக்கிறது. மேலும் தினமும் ஒரு வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி வருதலும் நடக்கிறது.
வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பாபநாசத்தில் இருந்து செண்டைமேளம், நையாண்டி மேளம் முழங்க அய்யா ஆஞ்சநேயர் வாகனத்தில் முன்னே வர யானை மீது சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வருதலும், அதன்பின்னர் அன்னதானமும், இரவு 8 மணிக்கு அய்யா வழி ஆன்மீக வழிபாடு சிவசந்திரனின் கச்சேரி நடக்கிறது.
வருகிற 3-ந்தேதி (திங்கட் கிழமை) அய்யா சின்ன தேரில் சிங்கார மாய் உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம், இரவு அன்னதர்மமும், அதிகாலை 2 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் வந்தபின், கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம் பதி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






