search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thrissur accident"

    கேரள மாநிலம் திருச்சூரில் பஸ் ஏறி இறங்கிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூர் புழக்கல் பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகள் கிருஷ்னேந்து (வயது 18). கல்லூரி மாணவி. இவர் இன்று காலை அங்குள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அங்கு அவர்களை பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

    புழக்கல் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சூரில் இருந்து குன்னங்குளத்திற்கு ஒரு தனியார் பஸ் வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவி ரோட்டில் தவறி விழுந்தார்.

    அப்போது அதே பஸ்சின் பின் சக்கரம் மாணவி மீது ஏறி இறங்கியது. இதில் மாணவி கிருஷ்னேந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×